Thursday, March 3, 2011

காஷ்மீர் - சில தகவல்கள் ...!!!! ...தொடர்ச்சி


 காஷ்மீர் - சில தகவல்கள் ...!!!!முதலாம் பாகத்தின் தொடர்ச்சி..
     அப்படி என்ன தாங்க நடக்குது காஷ்மீரில் ...?

இந்திய இராணுவத்தினர் காஷ்மீர் முஸ்லீம்களை அரக்கத்தனமாக கொடுமைப்படுத்துகிறார்கள் என்று பாகிஸ்தான் சொல்லுது.
பாகிஸ்தானியர்கள் குண்டுவடிப்பு, துப்பாக்கிசூடு  என்று காஷ்மீரிகளை தாக்குகிறார்கள் என்று இந்திய சொல்லுது.
எதை நம்புறது? ஆனால் ரெண்டுமே நடந்த்துட்டுதாங்க இருக்கு.

யாரோடவும் சேரமாட்டோம், தனி நாடினராத்தான் இருப்போம் ன்னு பிடிவாதமா இருக்கும் காஷ்மீர் மக்கள் தான் நடுவுல மாட்டிகிட்டு திண்டாடுறாங்க..

ஆனா அதே சமயம் ரெண்டு நாடுகள்கிட்டேஇருந்தும் கிடைக்குற சலுகைகளை அனுபவிக்கவும் தவறல...

ஒரு பக்கத்துல டூரிசம், ஆடல், பாடல், என்று கேளிக்கைகளும் நடதுட்டுதன் இருக்கு. இன்னொரு பக்கத்துல குண்டுவெடிப்பு, துப்பாக்கிசூடு, கலவரம் ன்னும் நடந்துட்டு தான் இருக்கு.

இந்த இடத்துல ஒரு யதார்த்த ஜோக்கு தான் ஞாபகம் தாங்க வருது.  ஒரு ஜோசியர் ஜோதிடம் பாக்க வந்தவரிடம் " இன்னும் மூணு மாசத்துக்கு உனக்கு கஷ்டம்தான்யா" சொன்னாராம். உடனே அவன் அதுக்கப்புறம் ன்னு கேட்டான். அதுக்கு ஜோசியர் " அதுவே பழகிடும் சொன்னாராம்.. அது போலத்தான் காஷ்மீர் மக்களின் நிலைமையும். அப்படியே பழகிடுச்சு.

இது இன்னைக்கு, நேத்து நடக்குற பிரச்னை இல்லைங்க.. காலம் காலமா நடதுட்டுதான்  இருக்கு.



காஷ்மீரின் வரலாற்றை சுருக்கமா பாப்போம் :

ஜம்மு காஷ்மீர் 3 பகுதிகளை கொண்டது.
1 . ஜம்மு
2 . காஷ்மீர்
3 . லடாக் (காஷ்மீர் பள்ளத்தாக்கு)

இதில் ஜம்முவில் முஸ்லிம்களும், காஷ்மீரில் இந்துக்களும், லடாக்கில் பௌத்தர்களும் அதிக அளவில் வாழ்கின்றனர்.

இவர்களுக்குள் பல நூற்றாண்டுகளாக கருத்து வேறுபாடு, சண்டைகள் இருந்து கொண்டேதான் இருக்கு.

முகலாயர்கள், மௌரியர்கள் என்று ஆட்சி மாறினாலும், இவர்களுக்குள் கருத்து பேதங்கள் தொடர்ந்துட்டுதான்
இருக்கு. ஆனால் அதை ஆட்சியாளர்கள் இன்றுவரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

ஊரார் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற கதை தான்..
இரண்டு தலைநகரங்களில் ஜம்மு கோடை காலத்திலும், ஸ்ரீநகர் குளிர் காலத்திலும் தலை நகரங்களாக செயல்படுகிறது.

ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது, இங்கிலாந்தின் தட்பவெப்பநிலையை கொண்டிருந்ததால் ஆங்கிலேயர்களின் மனம் கவர்ந்த கோடை வாசஸ்தலமாக விளங்கியது.

1947 லில் சுதந்திரம் அறிவிக்கப்பட்டபோது, இந்தியா, பாகிஸ்தான் , வங்களாதேசம் , நேபாளம் என்று  ஒன்றிணைந்த இந்தியா துண்டு துண்டானது.

இதில் பாகிஸ்தான்   லிருந்து  வங்காளதேசம் பிரிந்ததும், அதற்கு இந்தியா உதவியதும் தனிக்கதை

இப்போது இந்தியாவை
துண்டு துண்டாக்க சீனா முயற்சி செய்வது தனிக்கதை.

இப்படி விவகாரமான எல்லையை பிரித்து காஷ்மீரை இந்தியாவுடன் சேர்த்துவிட்டு போய்விட்டது இங்கிலாந்து. காஷ்மீர் மட்டுமில்லைங்க வடகிழக்கு எல்லைகளான அஸ்ஸாம், நாகலாந்து, மணிப்பூர் என அனைத்தும் தனி நாடாக வேண்டும்னு இன்னும் போராடிகிட்டு தான் இருக்கு.

இங்கிலாந்து சுதந்திரத்தை மட்டுமில்லைங்க, இந்த மாதிரி பல உள்நாட்டு பிரச்சனைகளயும் தந்துட்டு போயிடுச்சு.  தெரியாம இல்லைங்க. தெரிஞ்சேதான். இதுதான் ராஜ தந்திரம், அரசியல் சூழ்ச்சி.

இதற்கு என்னதான் தீர்வு ன்னு கேக்குறீங்கள? 

மக்கள் கிட்ட கருத்து கேட்டு பெருபான்மை  படி தனி நாடாகவோ, இல்லை  அதன் விருப்படியோ பிரித்து கொடுக்கலாம்.   ஆனால்  கருத்து கேக்க எந்த நாடும் விரும்பலை. அதுக்கு அரசாங்கம் சொல்லும் பதில் ( அது எந்த கட்சி ஆட்சியாளர்களாக இருந்தாலும்)

1 .  எல்லையாக இருப்பதால் சீனா எளிதில் தன் வசபடுத்திவிடும்.
2 . அதன் மூலம் இந்தியாவிற்கு பல ஆபத்துக்கள் நேரிடும்.

இதுபோல பல அரசியல் ரீதியான காரணங்களை சொல்லிக்கொண்டே போகிறது அரசாங்கம்.



எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தும் ஆற்றல் காலத்திற்கு மட்டுமே உண்டு.
அந்த காலம் தான் காஷ்மீர் மக்களின்  மனதில் தெளிவை ஏற்படுத்தி தங்கள் உரிமையை அமைதியான முறையில்
கேட்டு பெற வைக்க வேண்டும்...

காலத்தினால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்....!!!!


3 comments:

RAJA RAJA RAJAN said...

நல்ல தகவல்கள்.

கூடுதலாக ஒரு விஷயம். நீங்கள் கூறிய படி, காஷ்மீர் தனி நாடு என்ற எண்ணம், ஸ்ரீநகரில் மட்டும் தான் இருக்கிறது. அதுவும் கூட, ஸ்ரீநகரத்து இளைஞர்கள் மத்தியில் மட்டுமே அப்படி வலுவானதொரு எண்ண ஓட்டம் காணப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் மற்ற பகுதிகளில், தாங்கள் இந்தியர்கள் தான் என்று கூறுகின்றனர், மக்கள். ஸ்ரீநகரில் காணப்படும் நிலைக்கு அரசியல் தவிர வேறு எதை காரணமாகக் கூறுவது...?

RAJA RAJA RAJAN said...

சிரமம் எடுத்து தகவல்கள் கோர்த்து வலைப்பதிவு செய்ததற்காக வாழ்த்துகள்.

சக்தி கல்வி மையம் said...

நன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி

Post a Comment